அலைபேசி அழைப்பை ஏற்காத அதிகாரிகள்: மக்கள் அதிருப்தி.!

57பார்த்தது
திருவாடானை தாலுகாவில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அரசு வழங்கிய அலைபேசி எண்களில் பொதுமக்களின் புகார் அழைப்புகளை ஏற்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், அதிகாரிகள் உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளவும் அரசு தரப்பில் அனைத்து துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் சேவைக்காக வழங்கப்பட்ட அலைபேசியை தற்போது எத்தனை அதிகாரிகள் முறையாக பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

திருவாடானை தாலுகாவில் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள் அரசு வழங்கிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் பொதுமக்களின் புகார் அழைப்புகளை எடுப்பதில்லை. அதிகாரிகள் பதில் அளிக்காமல் அழைப்பை தவிர்த்து வருவதால் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது

தொடர்புடைய செய்தி