BREAKING: சபாநாயகர் அப்பாவுவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

80பார்த்தது
BREAKING: சபாநாயகர் அப்பாவுவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை
அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக ஏற்க மறுத்து விட்டதாகவும் அப்பாவு பேசியிருந்தார்.

தொடர்புடைய செய்தி