திருவாடானையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

2243பார்த்தது
திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில் கிருஸ்தவ ஆலயம் மற்றும் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிராத்தனை திருப்பலி இன்று அதிகாலை நடைபெற்றது. பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, சின்னக்கீரமங்கலம், தொண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் பங்குத்தந்தைகள் திருப்பலி ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். அதுபோல திருவாடானை தென்கிழக்கு தெருவில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இளைஞர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி