திருவாடானை டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்த பெட்டிசன் மேளா.!

73பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, டி. எஸ். பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் சந்தீஸ் உத்தரவின் பேரில் ஒவ்வோர் செவ்வாய் கிழமை தினங்களில் பொதுமக்கள் நலன் கருதி பெட்டிசன் மேளா நடத்தப்பட்டு வருகிறது.
 இன்று திருவாடானை டி. எஸ். பி அலுவலகத்தில் டி. எஸ். பி நிரேஷ்பழனிவேல் தலைமையில் நடந்த பெட்டிசன் மேளாவில் திருப்பாலைக்குடி, திருவாடானை, ஆர் எஸ் மங்கலம், தொண்டி, எஸ்பி. பட்டினம், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புகார் கொடுத்தனர். புகார் மனுக்களின் பேரில் அந்தந்த காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் விசாரித்து நடவடிக்கை உடனடியாக எடுத்து முடித்து வைக்கப்பட்டது.
       
இந்த நிகழ்வில் பயிற்சி DSP யாஸ்மின் பானு மற்றும் சார்பு ஆய்வாவாளர்கள் உள்ளிட்ட காவலர்கர்கள் கலந்து கொண்ட பெட்டிசன் மேளாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது அதன பேரில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி