3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாகனத்துடன் பறிமுதல்

70பார்த்தது
திருவாடானை அருகே 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாகனத்துடன் பறிமுதல் செய்த அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகா திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் தாலுகா சிவில் சப்ளை  துறை நீதிபதி ஹேமாவதி  திருப்பாலைக்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  காந்தி நகர் பகுதியில்  சந்தேகத்திற்கு   இடமான வாகனத்தை  சோதனை செய்த பொழுது  அந்த வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். பதிவு எண் TN 04 C 4770 எண் கொண்ட வாகனத்தினை சோதனை செய்த போது அதில் சுமார் 60க்கும் மேற்பட்ட வெள்ளை சாக்குகளில பொது விநியோகத் திட்ட அரிசி இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினர்..
அந்த  வாகன ஓட்டுனர் தப்பி ஓடியநிலையில் வாகனத்துடன் திருவாடானை அருகே கடம்பாகுடியில் உள்ள வட்ட செயல்முறை கிடங்கில் எடை போட்டு இருக்கி வைத்து யார் இந்த ரேசன் அரியை கடத்தியது, எங்கிருந்து பெறப்பட்டது என்று விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி