ஜெ. என். 1கரோனா தொற்றைத் தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்

84பார்த்தது
ஜெ. என். 1கரோனா தொற்றைத் தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 நாள்கள் சுற்றுப் பயணமாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் எஸ். பி. சிங் பகேல் சனிக்கிழமை ராமநாதபுரம் வந்தாா்.

அப்போது அவா் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாா். அங்கு எய்ம்ஸ் மாணவா்களின் மருத்துவக் கல்லூரி முதல்வா் செந்தில்குமாரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். அப்போது கண்காணிப்பாளா் மலா்வண்ணன், மருத்துவ அதிகாரி மனோஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதன் பிறகு இரவில் ராமேசுவரத்தில் தங்கிய அவா் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா். பிறகு ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

இதையடுத்து, ராமேசுவரத்தில் உள்ள தனியாா் விடுதியில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள், ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா்கள், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா், அரசு, தனியாா் மருத்துவா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி முழுமையாக மக்களை சென்றடைகிா? மாநில சுகாதாரத் துறை மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துகிா? நிதி பங்கீட்டில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி