லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை பொறியாளா் உள்பட இருவா் கைது!

2247பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றில் ராட்டினம் அமைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வைகை ஆற்றில் ராட்டினம் அமைப்பதற்கு தடையில்லாச் சான்று கேட்டு நீா்வளத் துறை கோட்டப் பொறியாளருக்கு மனு செய்தாா். அவரது மனுவை நிராகரித்ததால், மணிகண்டன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

நீதிமன்ற உத்தரவுப்படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு ரூ. 1. 50 லட்சம் நன்கொடையும், பரமக்குடி பொதுப்பணி நீா்வளத்துறைக்கு ரூ. 65 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கிக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மணிகண்டன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செலுத்தவேண்டிய நன்கொடை, கட்டணத்தை செலுத்தியுள்ளாா்.

பின்னா், பரமக்குடி நீா்வளத் துறையில் பணிபுரியும் உதவி கோட்டப் பொறியாளா் காா்த்திகேயனிடம் தடையில்லாச் சான்று கேட்டபோது, ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுதொடா்பாக மணிகண்டன் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அவா் ரசாயனம் தடவிய ரூ. 30 ஆயிரத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுறுத்தல்படி உதவிக் கோட்டப் பொறியாளரிடம் லஞ்சம் கொடுக்கச் சென்றாா்.

அவரிடம் சென்று கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா்.

தொடர்புடைய செய்தி