ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே அரசுப் பேருந்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மண்டபம் அருகேயுள்ள குஞ்சாா்வலசைப் பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, திருச்சியிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சோதனையிட்டனா்.
அதில் அந்தமான் நிக்கோபாா் தீவுகளைச் சோ்ந்த சக்திவேல் உரிய ஆவணமின்றி ரூ. 10 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.