சாயல்குடியில் தமிழ்நாடு மின்பணியாளர்கள் வாரிய பொதுக்கூட்டம்!

70பார்த்தது
சாயல்குடியில் தமிழ்நாடு மின்பணியாளர்கள் வாரிய பொதுக்கூட்டம்!
சாயல்குடியில் தமிழ்நாடு மின் பணியாளர்கள் வாரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராமாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழ்நாடு மின் பணியாளர்கள் வாரியத்தின் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மின்சார வாரியத்தில் தற்போது களப்பணியிலும், கணக்கிட்டு பணியிலும் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2021 ல் 9, 613 கேங்மேன் பணியாளர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும். மின்சார வாரியம் தொடர்ந்து பொது துறையில் நீடிக்க வேண்டும். தனியார் மயமாக்கப்பட கூடாது. மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வாரிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி