செல்லியம்மன் கோவில் பூச்சொரிதல்: பூக்குழி இறங்கிய பக்தர்கள்.!

84பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீசெல்லியம்மன் கோவிலின் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழா நடைபெற்று வருகிறது.

10 ஆம் நிகழ்ச்சியான இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகுளத்தூரை நகர் வலம் வந்து செல்லியம்மன் கோவில் முன்பு அமைக்க பட்ட பூக்குழியில் இறங்கினர்.

இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் 20 அடி சூலாயுதம் அலகு குத்தி மற்றும் பறவை காவடி எடுத்தும் பூக்குழி இறங்கினர்.

இந்த விழாவில் முதுகுளத்தூரை சுற்றிலும் உள்ள பகுதிகளிலிருந்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

விழா ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் திருக்கோவில் பக்தசபை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி