செல்லியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்.!

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.


அதனைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் நாள்தோறும், காலை, மாலை என இருவேளைகளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், 9-வது நாள் திருவிழாவான இன்று காலை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பால்குடம் நேர்த்திக்கடன் எடுத்த பக்தர்கள் முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை சாலை வழி விடு முருகன் கோவில் வழியாக தலையில் பால்குடம் சுமந்தவாரு ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது இந்த பால்குடம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், முக்கிய நிகழ்ச்சியாக நாளை, 21 ஆம் தேதி 20, 000க்கு மேற்பட்ட மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் அழகுவேல் குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி