கஞ்சா தருவதாக இளைஞர் மீது தாக்கு: ஒருவர் கைது.!

72பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ஜெய வீரபாண்டி(49). இவருக்கும் நீராவிகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டையில் வசித்து வருபவருமான அரியப்பன் மகன் பசும்பொன் முத்துக்காளை(24) மற்றும் இவரது நண்பரும் கடந்தாண்டு கோயில் திருவிழாவில் வரி வசூல் செய்வதில் உள்ள பிரச்சனையை மனதில் வைத்து, கஞ்சா வைத்திருப்பதை எடுத்து தருவதாக ஜெயவீரபாண்டியை அழைத்துச் சென்று கே. வேப்பங்குளம் விலக்குச் சாலை அருகே கருவேலங்காட்டு பகுதியில் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த ஜெய வீரபாண்டி கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜெயவீரபாண்டியின் மனைவி செல்லத்தாய்(41) அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து பசும்பொன் முத்துக்காளையை கைது செய்து சிறையலடைத்தனர்.

தொடர்புடைய செய்தி