ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும்படை 10 லட்சம் பறிமுதல்

3333பார்த்தது
ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும்படை 10 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரத்தை அடுத்த உச்சப்புள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் சக்திவேல் என்பவரிடம் 10 லட்சம் பணம் ப அரசுப்பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் நடத்திய சோதனையில் ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்ட போது, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 லட்சம் பணம் எடுத்துச் சென்றதையடுத்து அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி