நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து எந்த தொகுதியில் பதவியை ராஜினாமா செய்யலாம் என நடந்த ஆலோசனை கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ராஜினாமாவை தொடர்ந்து வயநாட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.