சீரியல் டப்பிங் சங்கத் தலைவராக ராதா ரவி தேர்வு

58பார்த்தது
சீரியல் டப்பிங் சங்கத் தலைவராக ராதா ரவி தேர்வு
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார். அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சர்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கதலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி