டாஸ்மாக்யை அகற்ற வேண்டும் மனு!

68பார்த்தது
டாஸ்மாக்யை அகற்ற வேண்டும் மனு!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுக்கா நவம்பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைக்கு வருவோர் மதுபாட்டில் மற்றும் பாலித்தீன் பைகளை அருகில் உள்ள விவசாய நிலங்கள், குளம் ஆகியவற்றில் வீசிவிட்டு செல்கின்றன. இதனால் குளம் மாசடைந்து வருவதுடன் வயலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி