வயலோகம் பகுதியில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு!

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் கிராமத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த சிலர் மஞ்சள் காமாலை அறிகுறி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டதால், அங்கு சுகாதாரத் துறையினர் 2ஆவது நாளாக வியாழக்கிழமை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர்.
வயலோகம் கிராமத்திலுள்ள கீழத்தெருவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஊராட்சி சார்பில் அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது தொட்டி நீண்ட நாள்கள சுத்தம் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர், மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் தேங்கி நிற்பதாகவும், அந்த கழிவுநீர் ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கி கிணற்று நீரில் கலந்து, அந்த நீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்பட்டதாவும் கூறப்படுகிறது.
அந்த நீரை குடித்த அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சிலருக்கு புதன்கிழமை வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன.
தகவலறிந்து அங்கு வந்த மருத்துவத் துறையினர், அங்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 12 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 45 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு அனுப்பப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு அப்பகுதியில் மருத்துவ முகாம நடத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி