கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம்!

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினருடன் 100கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மீது புலன் விசாரணை நடத்த கோரியும், தேர்வு நடத்தும் பணியிலிருந்து தேசிய தேர்வு முகமை வெளியேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் வௌி மாநிலங்களில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4, 750 மையங்களில் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வழக்கம் போல் ஜூன் 14ம் தேதி வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது மக்களவை தேர்தல் முடிவுகள் வௌியான ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகளும் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வெழுதிய 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது போன்ற விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கில், “நீட் தேர்வை நடத்துவதில் எந்த ஒரு அலட்சியம் இருக்க கூடாது.

தொடர்புடைய செய்தி