காரையூரில் மருத்துவ முகாம்!

68பார்த்தது
காரையூரில் மருத்துவ முகாம்!
பொன்னமராவதி: காரையூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு
மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர்கள் யமுனா, சுஜிதா, மனோஜ் மற்றும் செவிலியர்கள் 71 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனை மேற்கொண்டு உணவு மற்றும் சுகாதாரம் பேணும் முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

ரத்தசோகை கண்டறியப்பட்ட பெண்களுக்கு 15 கர்ப்பிணிகள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி