அரிமளம்: விவசாயி தூக்கு மாட்டி தற்கொலை!

578பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்துள்ள அரிமளம் ஒன்றியம் வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன்(56). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மதியழகன் வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி