மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்!

60பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மழையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருப்பட்டிபட்டி அக்னி ஆற்றில் மணல் கடத்தி சென்ற 2 டிராக்டர்கள் மற்றும் 1 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி