அறந்தாங்கி: பைக்கில் பதுங்கியிருந்த விஷப்பாம்பு - பரபரப்பு!

1109பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் என்ற பாம்பு இருசக்கர வாகனத்தில் இருந்து வெளியே தலையை நீட்டியபடி இருந்தது. இதைக் கண்டு அருகில் இருந்த நபர் இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதாக கூறியதால் வாகன உரிமையாளர் வந்து பார்த்துள்ளர். அப்போது அவர் வந்து பார்த்தபோது அவர்களைப் பார்த்த பாம்பு இருசக்கர வாகனத்தின் உள்ளே சென்று விட்டது.

செய்வது அறியாது விழி பிதுங்கி கொண்டிருந்த நேரத்தில் இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் அங்கு வந்து வண்டியின் சீட்டை கழற்றி, அதில் உள்ளே சுற்றிக்கொண்டு இருந்த விஷப்பாம்பை வெளியே விரட்டிவிட்டார். அதனால் ஒரு மணி நேரம் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி