ஆற்றுக்குள் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் கிராம மக்கள்!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட
கீழ்குடி வாட்டாத்தூர் ஊராட்சியை சேர்ந்தது சிறுகாசவயல்.
இக்கிராமத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் குடிநீர் பயன்படுத்த ஊராட்சி நிர்வாகம் இரண்டு குடிநீர் பைப்புகளே அமைத்து தந்துள்ளனர். இருந்த போதிலும் சுமார் இரண்டு மாதங்களாக குழாயில் வந்த தண்ணீரும் தற்போது வராமல் புஸ் என்ற சப்தத்துடன் காற்று வரும் சப்தமே கேட்கிறது. குடிதண்ணீருக்காக இப்பகுதி பெண்கள் கைக்குழந்தையை சுமந்தபடி ஒரு கையில் குடத்துடன் மற்ற பெண்களுடன் இணைந்து ஆற்றுக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று ஆற்றுக்குள் ஊற்று தோண்டி குடிப்பதற்கு குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே இந்த குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சிறுகாசாவயல் கிராம பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு
இப்பகுதி மக்களுக்கு தூய குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி