அறந்தாங்கி: நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை!

564பார்த்தது
அறந்தாங்கி: நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசர்குளம் தென்பாதி பகுதியில் குளத்தில் சாந்தி அம்மாள்(வயது 75) என்ற மூதாட்டி குளிக்க சென்றுள்ளார். அவர் குளத்தில் குளித்திருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 15 சவரன் எடை கொண்ட 15 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை அவர்கள் திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாகுடி போலீசார் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி