தாசில்தார் அலுவலகத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம்!

63பார்த்தது
தாசில்தார் அலுவலகத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம்!
ஆவுடையார் கோவில் தாலுகாவில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு அதன் முகப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உள்ளே சென்று வாகனங்கள் வெளியேறுகின்ற பாதை உட்பட பேவர் பிளாக் போடப்பட்டது இந்த வேலை செய்தவர்கள் ஒழுங்காக பேஸ்மட்டம் அமைக்காததால் நடுப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் சிறிய மழைக்கே சாலை நடு பகுதியில் தண்ணீர் தங்குவதால் அதில் பிளாஸ்டிக் பொருள்கள் சேர்வதுடன் தாலுகா ஆபீசுக்கு உள்ளே வரும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் தன்மையில் உள்ளது எனவே கான்ட்ராக்ட் வேலை செய்பவர்கள் பொது மக்களின் நலனை பார்க்காமல் ஏனோதானோ என்று வேலையை முடித்து பில் எடுக்கப்பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது எனவே தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த வேலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுபொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

தொடர்புடைய செய்தி