அறந்தாங்கியில் நடமாடும் நூலகப் பேருந்து!

60பார்த்தது
அறந்தாங்கியில் நடமாடும் நூலகப் பேருந்து!
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடமாடும் நூலக விழிப்புணா்வு பேருந்து, அறந்தாங்கி பகுதிகளில் நிறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 7-ஆவது புத்தகத் திருவிழாவை வரும் ஜூலை 27 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை நடத்துகின்றன. இதை முன்னிட்டு, நூலகத் துறை சாா்பில் நடமாடும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் நூலகப் பேருந்து அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகா்மன்ற அலுவலகம், பேருந்து நிலையப் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. அதற்கு, நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அறந்தாங்கி நூலக அலுவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி