புதுக்கோட்டை பகுதியில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. மதிய வேளையில் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் நுங்கு விற்பவர்களிடம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். உடலுக்கு தேவையான நீர்ச் சத்தை அளிக்கும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. இதில் அறந்தாங்கியில் 2 நுங்குகளின் விலை ரூ. 10 என விற்கப்படுகிறது.