அறந்தாங்கி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்!

1067பார்த்தது
அறந்தாங்கி அடுத்த நானாக்குடி முக்கத்தில் செவ்வாய்க்கிழமை வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து ராமேசுவரம் கோயிலுக்கு 10 பேருடன் சொகுசு வேன் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நானாகுடி முகத்தில் மாலை வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமலிருக்க வேன் ஓட்டுநர் திருப்ப முயற்சித்தபோது இந்த விபத்து நேரிட்டதாக தெரிவித்த அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி