ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு கொடியேற்றம்

79பார்த்தது
ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு கொடியேற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ம் ஆண்டு கொடியேற்று விழா கட்சி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
கட்சியின் துவக்க தினத்தை முன்னிட்டு நகர தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்கள்
அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட பொருளாளர் காரியம் முகையதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட மருத்துவ அணி தலைவர்
ஜமால் முகமது, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர் ராயல் கனி, நகர பொருளாளர் பல்லாக்கு கனி, கிளை தலைவர் பீர் முகமது. கிளை பொறுப்பாளர் லட்சம் முகமது கட்சியின் தொகுதி நகர, கிளை நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி