சித்ரா பவுர்ணமி முன்னிட்டு புதுவையில் பூக்களின் விலை உயர்வு

1547பார்த்தது
புதுச்சேரியில் கடந்த வாரம் மல்லி கிலோ ரூ. 320க்கும், முல்லை, அரளி ஒரு கிலோ ரூ. 200க்கும், சாமந்தி கிலோ ரூ. 320க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ. 240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன் னிட்டு பெரியமார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ. 400க்கும், முல்லை, அரளி கிலோ ரூ. 300க்கும், சாமந்தி கிலோ ரூ. 600, பன்னீர் ரோஸ் கிலோ ரூ. 400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகளிடம் கேட்ட போது, கடந்த வாரம் பூக்களின் விலை கடும் வீழச்சி அடைந்தது. பூக்களின் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி