தங்கமாரியம்மன் அன்ன வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலித்தார்

82பார்த்தது
காரைக்கால் அடுத்த தலத்தெருவில் உள்ள பழமை வாய்ந்த தங்க மாரியம்மன் ஆலயத்தில் கொடியேற்றம் 21ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் நாள் நேற்று இரவு தங்க மாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகமும் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி