போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

73பார்த்தது
போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்தான ஆலோசனைக் கூட்டம் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் 100 மீட்டர் இடைவெளியில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதை தடை செய்து முற்றிலும் கண்காணிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் காரைக்காலில் அமைந்துள்ள மறுவாழ்வு மையங்கள் மூலம் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி