காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியில் உள்ள ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா 07ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இந்த நிலையில் இன்று 06ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.