கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் சாலையின் ஓரம் தனது ஸ்கூட்டியின் மேல் ஒரு இளைஞர் அமர்ந்திருந்த போது கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து இளைஞரை அடித்துத் தூக்கி உள்ளது. இந்த கோர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.