இரங்கல் செய்தி அனுப்பிய ரஷ்ய அதிபர்

74பார்த்தது
இரங்கல் செய்தி அனுப்பிய ரஷ்ய அதிபர்
உத்திரபிரதேசத்தில் நடந்த கோர விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், "உத்தரபிரதேசத்தில் நடந்த சோகமான விபத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு என்னுடைய அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும் அத்துடன் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். நேற்று (ஜூலை 2) உத்தரபிரதேசத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி