தொழிலாளர் தின பேரணி நடைபெற உள்ளது

76பார்த்தது
தொழிலாளர் தின பேரணி நடைபெற உள்ளது
மே-01 தொழிலாளர் தினம் பேரணி,
விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவரும் - கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவருமான பொன். குமார் தலைமையில் நடைபெறுகிறது,
திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பெரம்பலூர் காமராஜர் சிக்னல் பகுதியில் உள்ள
விவசாயிகள் தொழிலாளர் கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட செயலாளர் சிவபெருமாள் நேற்று
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உழைக்கும் தொழிலாளர்களை போற்றும் வகையில், மே-01, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பேரணி நடைபெறுகிறது. பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் இருந்து துவங்கி, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள " காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மெளலானா பள்ளி வழியாக பேரணி சென்று, ஆத்தூர் சாலையில் உள்ள அன்பு திருமண மண்டபத்தில் முடிவடைந்து, அங்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணியில் , விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவரும் - கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தலைவருமான பொன். குமார், தி. மு. க. பெரம்பலூர்
மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும், கட்டிடத் தொழிலாளர்கள், பொதுமக்கள், கழக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதில் தொழிலாளர்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி