ஏடிஎஸ்பி தலைமையில் போலீசார் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

84பார்த்தது
ஏடிஎஸ்பி தலைமையில் போலீசார் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறையினர்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் -14 -ம் தேதி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அன்று விடுமுறை என்பதால் அதனை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த உறுதிமொழியானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்களில் மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.