மகனை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது

9382பார்த்தது
மகனை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது
விருதுநகர்: சிவகாசி அருகே ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சுப்பிரமணியன் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மகன் அய்யனார் (20) தனது தந்தையுடன் சேர்ந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். அய்யனார் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாகி வீட்டில் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று போதையில் இருந்த அய்யனார் வீட்டை விற்று ரூ.5 லட்சம் பணம் கேட்டு தனது தந்தையுடன் சண்டையிட்டுள்ளார். அருகில் இருந்த அவரது பாட்டியை அய்யனார் தாக்கி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், பேச்சியம்மாள் கோபத்தில் மகனை உலக்கையால் தலையில் தாக்கிய நிலையில் அய்யனார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் உயிரிழந்த அய்யனாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி