மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத உத்தரவு

78பார்த்தது
மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத உத்தரவு
குரூப் 2 தேர்வு எழுதிய மாற்று பாலினத்தவரான அனுஸ்ரீ சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விசாரணை இன்று (ஜூன் 13) நடைபெற்றது. அப்போது, கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவரை, சிறப்பு பிரிவினராக கருத தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “மாற்று பாலினத்தவர்கள் தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமையாகும். உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால் சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்படுவர்” என கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி