நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை

76பார்த்தது
நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி,‌ முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றார். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். 6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி