கர்ப்பிணி பெண் கால்வாயில் சடலமாக மீட்பு!

62பார்த்தது
கர்ப்பிணி பெண் கால்வாயில் சடலமாக மீட்பு!
காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண்ணை சிலர் கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் சடலத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வேலைக்கு சென்ற தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், திருமங்கலம் பள்ளத் தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில், ஆடையின்றி இருந்த தேவியின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதால் தேவி அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி