கண்டன ஆர்ப்பாட்டம் உதகையில் நடைபெற்றது...

72பார்த்தது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தகாத வார்த்தைகளால் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உதகையில் நடைபெற்றது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வ பெருந்தகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரவுடி என்று கூறியதை கண்டித்தும் தொடர்ந்து செல்வப் பெருந்தகையை தகாத வார்த்தைகளால் பேசி வரும் அண்ணாமலையை கண்டித்து இன்று உதகை ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை சட்டமன்ற உறுப்பினரும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஆர். கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி