மருத்துவமனை சாலையில் உலா வந்த கரடி

1028பார்த்தது
உதகை நகரில் உலா வந்த கரடியால் பரபரப்பு. காவல் நிலையம், அரசு குடியிருப்பு, மருத்துவமனை சாலையில் உலா வந்த காட்சிகள்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் விலங்குகள் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் நுழைவது தொடர்கதை ஆகியுள்ளது.

இந்நிலையில் உதகை நகரில் கரடி ஒன்று நேற்று இரவு நுழைந்தது. அந்த கரடியானது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக G1 காவல் நிலையத்திற்குள் நுழைந்து மீண்டும் அப்பகுதியில் இருந்து வெளியேறி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் குடியிருப்பு சாலைகளில் உலா வந்தது. அதிகாலை வரை உதகை நகரில் சுற்றித்திரிந்த இந்த கரடி தற்போது அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

இருப்பினும் உதகை நகருக்குள் உலா வந்த கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தற்போது கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி