நிஃபா வைரஸ் பாதித்த சிறுவன் பலி

83பார்த்தது
நிஃபா வைரஸ் பாதித்த சிறுவன் பலி
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் இன்று (ஜுலை 21) உயிரிழந்தான். வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலை 11:30 மணியளவில் மரணம் நிகழ்ந்தது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். சிறுவன் வென்டிலேட்டரில் இருந்தபோது காலை 10:50 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இதனால் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி