சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழக அரசு

54பார்த்தது
சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழக அரசு
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலந்துள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவம், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்களின் தொடர்ச்சி என சொல்ல முடியாது என தமிழக அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி