நீட் ரேக்கிங் குழப்பம்- உச்சநீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்!

51பார்த்தது
நீட் ரேக்கிங் குழப்பம்- உச்சநீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்!
மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியது. மேலும், நீட் நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து, நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 5-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி