நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி நியமனம் அறிவிப்பு

4255பார்த்தது
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி நியமனம் அறிவிப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ். எம். மதுரா செந்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவா், தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க, மாணவா் அணி செயலாளா் எழிலரசன் அறிவிப்பின்படி நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூா் அளவில் மாணவரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். ஒன்றிய, நகர, பேரூா் அமைப்புக்கு ஓா் அமைப்பாளா் மற்றும் ஐந்து துணை அமைப்பாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். துணை அமைப்பாளா்களில் ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியின இனத்தைச் சோ்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளா் ஒருவரும் நியமிக்கப்படுவா். ஒரு துணை அமைப்பாளா் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருக்க வேண்டும். இந்தப் பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிா்வாகிகள் மீண்டும் பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவா்களும் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு உள்பட்டவா்கள் மட்டும் பொறுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். நியமிக்கப்பட உள்ள நிா்வாகிகள் அனைவரும் கல்லூரி டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் படிக்கக் கூடியவராகவோ இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக நிரப்பி பாஸ்போா்ட் அளவு வண்ண புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி