எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் எருமைப்பட்டி சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடுவளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டுவந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்தனர். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 10 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் நடந்தது.