குருசாமிபாளையம் பள்ளியில் சிறப்பு அஞ்சல் முகாம்

74பார்த்தது
மாணவர்களுக்கு சிறுசேமிப்பழக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசின் அஞ்சல் கணக்கு அனைத்து மாணவர்களுக்கும் துவங்க வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, இன்று நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு அஞ்சல் முகாம் நடைபெற்றது.

இதில் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் இம்முகாமை பயன்படுத்தி அஞ்சல் கணக்கைத் தொடங்கினார்கள். இதில் தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி