இராசிபுரம்: ரேஷன் அரிசி விற்றவர் கைது

58பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில், ஒரு சிலர் ரேஷன் அரிசி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கிடைக்கவே, அங்கு இருசக்கர வாகனத்தில் இன்று வந்த நபரை மடக்கி பிடித்து, ராசிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் 100 கிலோ ரேஷன் அரிசி 10 கிலோ ரேஷன் கோதுமை இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி